தென்னாபிரிக்காவில் டிரக் வண்டி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளன.
தலைநகர் ஜொஹனஸ்பெர்க் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..
டிரக் வண்டி ஒன்றின் மூலம் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் ஏற்றிச்செல்லப்பட்டன. டிரக்கின் உயரத்தை விட ஒட்டகச்சிவிங்கி உயரமாக இருந்ததால் அதன் கழுத்து டிரக்கிற்கு வெளியே இருந்தது. வண்டி பாலம் ஒன்றை கடந்து செல்கையில், பாலத்தின் சுவர் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தை பலமாக தாக்கியுள்ளது. பலத்த காயங்களுக்கு உள்ளான ஒட்டகச்சிவிங்கிகள் இரண்டும் உயிரிழந்துள்ளன.
சாரதியை வீதியில் இருந்தவர்கள் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாது அவர் வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சாரதி கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment