இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் காஸாவில் புதிய மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றிற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இருதரப்புக்குமிடையிலான போர்நிறுத்தம் 72 மணித்தியாலங்கள் நீடிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தெரவித்துள்ளன.
இரு தரப்பினருக்கும் இடையில் நிபந்தனைகள் முன்வைக்கப்படாத நிலையில் போர் நிறுத்தத்திற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை போர் நிறுத்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
காஸாவில் மோதல்களை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் நிரந்தர போர் நிறுத்தமொன்றிற்கான பேச்சுவாரத்தைகள் எகிப்தின் கெய்ரோவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,400ற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என தெரவிக்ககப்படுகிறது. இதேவேளை 56 இஸ்ரேலிய படையினர் உட்பட அந்த நாட்டு பிரஜைகள் இருவர் ஹமாஸின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. n1st

0 comments :
Post a Comment