தமிழ், - சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு பிறிதொரு சட்டமும் ஒரே நாட்டில் செயற்படுவதன் காரணத்தினாலேயே முஸ்லிம் தீவிரவாதம் பரப்பப்படுகின்றது. தேர்தலில் வாக்களிப்பின்போது முஸ்லிம்கள் நிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டமை எமக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ஜாதிக ஹெலஉறுமய தெரிவித்தது.
ஜாதிக ஹெல உறுமயவினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இந்த நாட்டில் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு சட்டமும் தமிழ் சிங்கள பெண் பிள்ளைகளுக்கு வேறு சட்டமும் செயற்படுத்த முடியாது. ஆனால் இன்று பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இவ்வாறு பிரிவினையே இடம்பெறுகின்றது. முஸ்லிம் மாணவிகள் தலையை மூடிய வண்ணம் ஹபாயாக்களை அணிவதால் தமிழ்,சிங்கள மாணவர்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் ஹபாயாக்களுக்குள் விடைத்தாள்களையும் ஹிஜாப்பினுள் தொலைபேசிகளையும் வைத்தும் பரீட்சை செய்து சித்தியடைகின்றனர். இவற்றை கண்டித்து நடவடிக்கை எடுக்க எவரும் இல்லை.
பாடசாலைகளில் முஸ்லிம்களே பிரிவினையினை தூண்டுகின்றனர்
பாடசாலைகளில் தனித்துவம் என்ற பெயரில் முஸ்லிம்கள் பிரிவினையினை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர். பாடசாலைகளில் இருந்தே இன்று முஸ்லிம் பிரிவினைவாதம் தூண்டப்படுகின்றது. ஹபாயாக்களையும் ஹிஜாப்பினையும் அணிந்து செயற்படுகின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த நாட்டின் பாடசாலைகளில் அனைவருக்கும் ஒரு சட்டம்தான்.
வாக்கு நிலையத்தில் ஹிஜாப்பிற்கு தடை
அதேபோல் இடம்பெறவிருக்கும் ஊவா மாகாண சபை தேர்தலில் முஸ்லிம்கள் தமது முகத்தை மூடும் வகையில் அணியும் ஹிஜாப் மற்றும் புர்கா உடைகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என நாம் முன்வைத்த கோரிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். வாக்கு நிலையங்களில் முஸ்லிம்கள் கள்ள வாக்குகளை போடுவதும் சட்டவிரோத செயல்களை செய்வதையும் இதன்மூலம் நாம் தடுத்துள்ளோம் என்றே கூற வேண்டும். இது எமக்கு மட்டுமல்ல முழு சிங்களவர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். இன்று வாக்கு நிலையங்களில் மட்டும் தடை செய்யப்பட்டதை எதிர்வரும் காலங்களில் அனைத்து செயற்பாடுகளிலும் மேற்கொள்வோம். முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளில் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற நாம் போராடுவோம்.
காஸா தாக்குதலை கண்டிக்கின்றோம்
மேலும், இன்று சர்வதேச அளவில் முஸ்லிம் தீவிரவாதம் செயற்பட்டுக்கொண்டுதானிருக்கின்றது. இதனால் முஸ்லிம்களே இன்று அழிகின்றனர். இன்று காஸாவில் ஆயி
ரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தாக்குதலுக்கு நாம் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம். எனினும் இன்று பாலஸ்
தீன் தாக்குதலை கண்டித்து இலங்கையில் கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கி போராடுகின்றனர். முஸ்லிம்கள் மீதான தாக்குதல் என கண்டிக்கின்றனர். ஆனால் இதுவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் போஹோ கராம் அமைப்பினர் பெண்களை நடத்துகின்றமையினை கண்டித்து ஏன் இவர்கள் வாய் திறக்கவில்லை.
முஸ்லிம் அமைச்சர்கள் எங்கே?
நாட்டில் முஸ்லிம்களுக்களு எதிராக பௌத்த தீவிரவாதம் பரவுவதாக சர்வதேச அளவில் பேசுகின்றனர். இங்குள்ள முஸ்லிம் அமைச்சர்கள் சர்வதேச மட்டத்தில் அறிக்கை வெளியிடுகின்றனர். ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகள் செய்யும் எதையும் ஏன் கண்டுகொள்ளவில்லை. பெண்களுக்கு எதிராக கலப்பு திருமணத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடுகின்றனர். ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகள் மதம் என்ற பெயரில் செய்யும் கொடுமைகளை ஆதரிக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களும் தீவிரவாதிகளா?
மதம் என்ற போர்வையில் இடம்பெறும் அடக்கு முறைகளையும் கொலைகளையும் கொடுமையான தண்டனைகளையும் ஆதரிக்கும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையிலும் அவற்றை பரப்பி நாட்டில் முஸ்லிம் இராச்சியம் ஒன்றினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இன்று ஐ.எஸ். அமைப்பின் வரைபடத்தில் இலங்கையையும் உள்ளடக்கி ஆள்வதாக கூறப்படுகின்றது. ஆனால் இலங்கை முஸ்லிம்கள் ஒருவரேனும் இதற்கு எதிராக வாய் திறக்கவில்லை. போஹோ கராம் தீவிரவாதிகள் 200 கிறிஸ்தவ பெண்களை கடத்தி மதம் மாற்றியுள்ளனர். இதை ஒருவரேனும் கண்டிக்கவில்லை. ஆப்கானில் முஸ்லிம்கள் வேற்று மதத்தவரை விரும்பியமைக்காக உயிர்களை பறித்து விடுகின்றனர்.
இது எவருக்குமே தவறாகத் தெரியவில்லை. ஆனால் அளுத்கமயில்இ பேருவளையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையினை குற்றம் கண்டுபிடித்து இனக்கலவரமாக மாற்றி விட்டனர். சர்வதேச அளவில் பரப்பி பௌத்த தீவிரவாதம் என்ற மாயையை உருவாக்கி விட்டனர். இலங்கையில் இன்று பல முஸ்லிம் தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களை இனம் காண வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பிரிவினருக்கே உள்ளது. அவர்கள் அலட்சியமாக இருப்பது நாட்டிற்கே பாதிப்பு.
0 comments :
Post a Comment