வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஆட்டோவில் கஞ்சா, ஆட்டோவும் சாரதியும் கைது!!


த.நவோஜ்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் ஆட்டோவில் கொண்டு வந்த கஞ்சாவும், ஆட்டோவும், ஆட்டோ சாரதியும் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

மீறாவோடை கிராமத்தில் இருந்து பிறைந்துரைச்சேனை பகுதிக்கு ஆட்டோவில் கஞ்சா கொண்டு வரப்படுவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்றினை சோதனையிட்ட போதே அதனுள் 530 கிராம் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கஞ்சாவுடன் குறித்த ஆட்டோவையும் கைப்பற்றியுள்ளதுடன், ஆட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆட்டோ சாரதியுடன் தொடர்புடைய கஞ்சா வியாபாரிகள் சிலர் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆட்டோ சாரதியை விசாரித்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :