காஸாவில் மீது மீண்டும் உக்கிர தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

 காஸா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அமுல்படுத்தபட்ட போர்நிறுத்தம் நிறைவு பெற்றதையடுத்து, மீண்டும் உக்கிர தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காஸா பகுதி மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் சுமார் 1900 பாலஸ்தீனியர்களும், ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலில் 67 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 5ம் திகதி தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி, அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரங்களுக்கு இந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கான காலக்கெடு உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் முடிவடைந்ததால் இஸ்ரேல் மீது முதலில் ஹமாஸ் இயக்கத்தினர் ரொக்கெட் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் காஸா பகுதியின் மீது 51 முறை பறந்த இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் படுகாயமடைந்தனர். இதுவரை இஸ்ரேலின் தாக்குதலில் பலியான 1900 பேரில், 429 அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்று ஐ.நா.சபை கணக்கிட்டுள்ளது.

தொடர்ந்தும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இஸ்ரேல் விருப்பம் தெரிவித்த போதும், ஹமாஸ் இயக்கத்தினர் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :