கிண்ணியா பிரதேசத்தில் இரண்டு தலைகளுடன் பிறந்த எருமைக் கன்று - படங்கள்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தின் குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டுப் பட்டியில் கடந்த வியாழக்கிழமை இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது.

இவருடைய பட்டியில் 150 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான சம்பவத்தை பார்த்தது இது தான் முதல் தடவை எனவும் கூறினார்.

ஈன்றெடுத்த கன்று ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த இரட்டைத்தலை எருமைக் கன்றை ஊரவர்கள் அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றார்கள்.
கி.நெ


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :