அமெரிக்கத் தூதரகம் பக்கச்சார்பாக செயற்பட்டு வருகிறது -அரசாங்கம்

மெரிக்கத் தூதரகம் பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் அமெரிக்க தூதரகத்தின் நிலைப்பாடு ஒரே விதமாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஊடக சுதந்திரம் தொடர்பில் அமெரிக்கா கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ஊடக அடக்குமறைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டு வருவதாகவும் வெளிவிவகார அமை;சசு அறிவித்துள்ளது. எனினும், ஊடக அடக்குமறைகள் தொடர்பில் அமெரிக்க தூதரகம் இலங்கையுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கைளை வெளியிடுவதுடன் அமெரிக்காவின் சரிசனை முடிமுவுக்கு வந்து விடுவதாகத் தெரிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற விதத்தில் கருத்தக்களை வெளியிடாது அமெரிக்கத் தூதரகம் ஒரு பக்கச்சார்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அளிக்கப்படும் பதில்கள் தொடர்பில் அமெரிக்கா கருத்திற்கொள்ளாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கைகள் ஒருபக்கச் சார்பாக அமைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :