வாகன விபத்தில் நடிகர் ரஜேந்தரின் தங்கை உட்பட 4பேர் பலி

சினிமா டைரக்டர் டி. ரஜேந்தரின் தங்கை சேமலதா. இவருடைய மகன் ஆதிகுரு (வயது 22). இவர் சினிமா உதவி டைரக்டராக பணியாற்றி வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறை வந்திருந்தார். இன்று காலை அவர் டாடா இண்டிகா காரில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை புறப்பட்டார். காரில் அவருடைய உறவினர்கள் பிரியதர்சினி (29), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயராகவன் (52) ஆகியோர் இருந்தனர். காரை விஜயராகவன் ஓட்டிவந்தார்.

அதிகாலை மரக்காணம் அருகே உள்ள செட்டிக்குப்பம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி ஒரு கார் வந்தது.

கண்இமைக்கும் நேரத்தில் இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இருகார்களும் நொறுங்கின. மயிலாடுதுறையில் இருந்து வந்த காரில் இருந்த ஆதிகுரு, பிரியதர்ஷினி, விஜயராகவன் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சென்னையில் இருந்து வந்த காரில் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி செந்தமிழ் (37), அவருடைய மகன் சுரேஷ்குமார் (19), டிரைவர் பாக்கியராஜ் (31) ஆகியோர் இருந்தனர். அவர்களும் படுகாயம் அடைந்தார்கள். இதில் சுரேஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். செந்தமிழ், பாக்கியராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்ததை அறிந்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :