கைது செய்யப்படும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரையும் பெரியவர்களாகக் கருத புதிய சட்டம்

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரையும் பெரியவர்களாகக் கருதும் வகையிலான சட்டமூலத்தை இந்திய மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று (12) அறிமுகம் செய்துவைத்தார்.

தற்போதுள்ள சட்டப்படி 18 வயதிற்குட்பட்டவர்கள் சிறுவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் வரைதான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவர்கள் இருக்க முடியும்.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெறும் பெரும்பாலான பலாத்கார குற்றங்களில் 18 வயதிற்கும் குறைவானோர் அதிகம் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறுவர் நீதி பேணல் மற்றும் பாதுகாப்பு சட்டம்-2014 என்ற சட்டமூலத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தயாரித்துள்ளது.

இதன்படி, கொலை, பலாத்காரம் உள்ளிட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதிற்கிடையேயான வயதுள்ள சிறுவர்களை எந்த சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் சிறுவர் நீதி வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளியை சிறுவர் நீதிமன்றத்திற்கு அனுப்புவதா அல்லது வழக்கமான நீதிமன்றத்திற்கு அனுப்புவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம், 16 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுத்தாலும்கூட, குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்க முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :