அக்கரைப்பற்று பிராந்தியத்தில் நாளை 14 மணிநேர நீர் வெட்டு

பைஷல் இஸ்மாயில்-

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் முகாமைத்துவத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதர் அலி தெரிவித்தார்.

இதன்படி அக்கரைப்பற்றுப் பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் நாளை புதன்கிழமை (06)  காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி  வரையான 14 மணி நேரத்திற்கு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளே இந்நீர்வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

நீர் வெட்டு அமுலில் உள்ள காலப்பகுதிக்குத் தேவையான நீரினை சேமித்து வைப்பதன் மூலம் சிரமங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு குறித்த பிரதேச மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :