பலஸ்தீனிய தாய்மார்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள்-இஸ்ரேலிய பெண் MPயின் ஊளை

லஸ்தீனியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்;காசாத் தாக்குதலில் அனைத்துத் தாய்மார்களும் கொல்லப்பட வேண்டியவர்கள் என இஸ்ரேலின் பிரபல பெண் அரசியல்வாதியும் ,பாராளுமன்ற உறுப்பினருமான Ayelet Shaked கூறியுள்ளதாக Daily Sabah பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அல்ட்ரா தேசிய யூத கட்ச்சியின் உறுப்பினரான Ayelet Shaked சிறிய பாம்புகளை ஈன்றெடுக்கும் அனைத்து பலஸ்தீனிய தாய்மார்களையும் கொல்ல வேண்டும்,அவர்களது வீடுகள் தகர்க்கப்பட வேண்டும்,அப்போது அவர்களால் தீவிரவாதிகளை சுமக்க முடியாது போகும்.அவர்கள் அனைவரும் நமது எதிரிகளே, அவர்களது குருதி நம்முடைய கைகளுக்கு வேண்டும்,தீவிரவாதிகளின் தாய்மார்கள் இறப்பதனாலே இவை அனைத்தும் முற்றுப்பெறும்,பாலஸ்தீனியர்கள் அனைவரும் இஸ்ரேலியர்களின் எதிரிகளே என கல்நெஞ்ச யூத இஸ்ரேலியப் பெண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட் கிழமை (ஜுலை 7) Ayelet Shaked தனது face book பக்கத்தில்:

“எல்லாத் தீவிரவாதத்திற்கும் பின்னால் டசின் கணக்கான ஆண்களும் பெண்களும் யாருடைய பங்களிப்பும் இன்றி தீவிரவாதத்தை ஊக்குவிக்க முடியாது.அவர்கள் அனைவரும் இஸ்ரேலியப் போராளிகளின் எதிரிகள்.அவர்களுடைய இரத்தம் தலையில் இருக்க வேண்டும் இப்போது இதுவும் உள்ளடக்கி இருக்கும் தியாகிகளின் தாய்மார்கள்;அவர்களை பூக்களுடனும் முத்தங்களுடனும் நரகத்திற்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.அவர்கள் தம்ம்முடைய மகன்களைப் பின்பற்ற வேண்டும்.இனி எதுவும் நடக்கப் போவதில்லை.அவர்கள் போக வேண்டும் , பாம்புக் குட்டிகளை ஈனும் அவர்களது பௌதீக இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் அதிகமான குட்டிப் பாம்புகள் அங்கே பெருகும் .” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலியப் பெண் அமைச்சரின் இக் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
” ஓர் இஸ்ரேலியப் பாராளு மன்ற உறுப்பினரான பெண் கூறியுள்ளார் பலஸ்தீனியத் தாய்மார்கள் அனைவரும் கொள்ளப்பட வேண்டும் என்று,இவருடைய மனநிலைக்கும் ஹிட்லருடைய மனநிலைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? என துருக்கிப் பிரதமர் Erdogan கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏய் இஸ்ரேலிய சுண்டெலிகளே! எந்தச் சந்து பொந்தில் ஒளிந்திட்டாலும் பாலஸ்தீனிய வீரத் தாய்கள் ஈனும் பாம்புகளுக்கு இரையாகிப் போவதை மறந்து விடாதே!

எம்முடைய பலஸ்தீனியத் தாய்மார்கள் உன் பொய் வாய்ச் சவாடலுக்கு அஞ்சா ஈமான்தாரிகள்.thanks srilanka muslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :