ஆசிர்-
இவளது பெயர் ஹனின் அப்து. இவள் பாலஸ்தீன நகரில் இஸ்ரேல் விமான ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்மணி .இந்த தாக்குதலில் இவளது வீடும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சரி, இனி இவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இந்த பெண்மணி பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்: இந்த பெண்மணி விமான ஏவுகணை தாக்குதலினால் இவளது கையின் மணிக்கட்டில் ஏற்ப்பட்ட எலும்பு முறிவு மற்றும் தசைக்கிழிப்பு போன்ற கடுமையான வலியினால் ஆன காயங்களின் காரணமாக எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், இவள் வலியை தாங்கிக்கொண்டு மன உறுதியுடன் இருந்ததால் அழாமல் இருந்தாள்.அவளது கையில் அதிகமான இரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தாலும் வலியை பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.அவ்வாறு இருந்த அந்த சிறுமியின் தைரியமும், துணிவும என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவ்வாறு இருந்த அந்த சிறுமிக்கு நான் சிகிச்சை அளிக்க அவளை நெருங்கிய போது நான் அதிர்ந்து போய்விட்டென்...அவ்வாறு நான் அதிர்ந்து போனதற்கு காரணம் என்ன தெரியுமா??வலி மறுக்கும் மயக்க ஊசியுடன் அவளை நான் நெருங்கியதே!!
மயக்க ஊசியுடன் அவளை நெருங்கியவுடன் உரக்க சத்தத்துடன் அவள் சொன்ன வார்த்தை, "இதை மட்டும் எனக்குப் பயன்படுத்த வேண்டாம், இதனால் எனது நோன்பு முறிந்துவிடும்" என்பதே.!!
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்....
அல்லாஹ் இந்த பெண்மணியையும் இவளது தாய் தகப்பனையும் மேன்மைபடுத்தி வைப்பானாக....
இவள் போன்ற நல்ல ஈமான் உள்ள மனிதர்களுக்கு இம்மையிலும் மறுமை வாழ்க்கையிலும் சிறப்பான அந்தஸ்த்தை தந்தருள்வானாக...



0 comments :
Post a Comment