மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் இப்தார் நிகழ்வு

த.நவோஜ்-

ட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு இவ்வாண்டு முதன் முறையாக இப்தார் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.

உள்ளுராட்சி உதவி ஆணையாளரும், நலன்புரி அமைப்பின் தலைவருமான க.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது விசேட சொற்பொழிவினை மௌலவி அஷ்செய்க் எம்.சியாத் (றசாதி) வழங்கியிருந்தார்;.

இதன்போது உள்ளுராட்சி மன்றத்தின் செயலாளர்கள் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :