அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவிலில் இப்தார் நிகழ்வு




சலீம் றமீஸ்-

ள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச மக்கள் பணிமனை ஏற்பாட்டில் பொத்துவில் அல் - இர்பான் வித்தியாலயத்தில் இப்தார் நிகழ்வு இடம் பெற்றது.

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கரிஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினரான ஏ.பதுர்கான தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு நிர்மானமும்,கிராமிய மின்சாரம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் அஸ்மி, உட்பட முப்படைத்தளபதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாயல் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகம், ஆட்டோ உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் மௌலவி அப்துல் அஸீஸ், மௌலவி எம்.எச்.ஹமீட் ஆகியோர்களினால் மார்க்க சொற்பொழிவு இடம் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :