என்ஜினீயரிங் மாணவர் பலி
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், நேரு. அவருடைய மகன் கணேஷ் (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறையையொட்டி தன்னுடைய நண்பர் கடையநல்லூர் அச்சன்பட்டியைச் சேர்ந்த ஜெகன் வீட்டுக்கு வந்தார். கணேஷ், ஜெகன் மற்றும் நண்பர்கள் சிலர் சேர்ந்து நேற்று முன்தினம் மாலையில், தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
அவர்கள் அனைவரும் பாபநாசம் தலையணையில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் கணேஷ் தலையணையில் இருந்து எதிரே உள்ள கொக்குப்பறை பகுதிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் கணேசன் திரும்பி வரவில்லை. நண்பர்கள் தேடி பார்த்தனர் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரம் என்பதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள்
நேற்று காலை தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவர்கள் தலையணைப் பகுதியில் கணேஷ் குளித்த பகுதியில் இறங்கி தேடினார்கள். அப்போது அங்கு உள்ள பாறைகளுக்கு இடையே கணேசின் உடல் சிக்கி இருந்ததை தீயணைப்பு பார்த்தனர். இதையடுத்து கணேஷ் உடலை மீட்டனர்.
மாணவன் கணேஷ் பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டதால் நண்பர்கள் தேடி பார்த்த போது கண்டுபிடிக்க முடியவில்லை.
விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கணேஷ் உடல் பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments :
Post a Comment