அங்கவீனமுற்றவர்களுக்கு உதவி-வாகரையில்

த.நவோஜ்-
 ம்பிக்கை இழந்தவர்களுக்கு சக்தி அளித்து அவர்களுக்கு புதிய வாழக்கையை உருவாக்குவோம் என்னும் தொனிப் பொருளில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் என்பன செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன், சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் ஆலோசகர் ஜீவராசா, சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் தொழில் நுட்பவியலாளர் சிசிலகுமார, எஸ்கோ நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் செல்வி.கோதை பொன்னுத்துரை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

எஸ்கோ நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் சென்றல் போ கண்டிகப் கண்டி நிறுவனத்தின் அனுசரணையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அங்கங்களை இழந்த நாற்பத்தேழு பேருக்கு எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால் மற்றும் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்கான கதிரைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :