அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் விபத்து ஒருவர் பலி-படங்கள்




வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனம் இன்றுமுற்பகல் 11.30மணியளவில் வவுனியா ஓமந்தையை அண்மித்துள்ள நொச்சிமோட்டைப் பகுதியில் வளைவொன்றில் திரும்பிய போது வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்தின்போது படுகாயமடைந்து மூவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.athirady
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :