அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுமேயானால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை மாற்ற முடியும்

னை­வ­ருமே எதிர்க்கும் அர­சாங்க முறை­மைக்கு எதி­ராக தனித்து போரா­டாது அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுமேயானால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­றி­ய­மைக்க முடியும். ஆட்சி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டு­மாயின் தமிழர் பிரச்­சி­னைக்­கான தீர்வும் இல­குவில் எட்­டப்­படும் என தெரி­விக்கும் மாது­லு­வாவே சோபித தேரர் ஜனா­தி­ப­தியே இதை சொய்­வா­ராயின் பொது வேட்­பா­ள­ருக்­கான தேவை இருக்­காது எனவும் சுட்டிக் காட்­டினார்.

மாது­லு­வாவே சோபித தேரர் மற்றும் விவ­சா­யிகள் சங்­கத்­தினர் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று கோட்டை நாக­வி­கா­ரையில் இடம்­பெற்­றது. இதன் பின்னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது பற்றி மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அனைத்து தரப்­பி­னரும் இன்று நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது தொடர்பில் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இம்­மு­றை­மை­யினால் வெறு­மனே அர­சி­யலில் மட்டும் தாக்கம் செலுத்­தாது விவ­சா­யிகள், தொழி­லா­ளர்கள், பொது­மக்கள் என அனை­வ­ரையும் இது பாதிக்­கின்­றது. இவற்­றினை பாது­காக்க கட்­சிகள் தனித்து போரா­டு­வதில் எவ்­வித பய­னு­மில்லை. அனை­வரும் ஒரு கொள்­கையின் கீழ் ஒன்­றி­ணைய வேண்டும்.

தமிழர் பிரச்­சி­னை­யொன்று உள்­ளது. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான முரண்­பா­டுகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. இவை தொடர்பில் தனித்­த­னியே போரா­டு­வது அர்த்­த­மற்­றது. எனவே, அதி­காரப் பகிர்வு நோக்கி பொது நோக்­கத்­திற்­காக போராடி அதில் மாற்றம் ஒன்­றினை ஏற்­ப­டுத்­து­வோ­மாயின் தமிழர் பிரச்­சி­னை­க­ளுக்கு தானா­கவே ஒரு தீர்வு எட்­டப்­பட்டு விடும்.

அதேபோல், தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண சர்­வ­தேச அழுத்­த­மொன்றோ, தலை­யீடோ தேவை­யில்லை. இலங்­கைக்­குள்­ளேயே தீர்வு நோக்கி பய­ணிக்க முடியும். இதை எமது அர­சியல் தலை­வர்­களே செய்து முடிக்க வேண்டும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு இல­குவில் எட்டக் கூடிய ஒன்றே. புரிந்­து­ணர்வும் விட்டுக் கொடுப்பும் இருக்கும் வரையில் தீர்வு கிடைப்­பது நிச்­ச­யமே.
வாயை மூடி அமை­தி­யாக இருந்து உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது. போரா­டி­னால்தான் உரி­மை­யினை பெறலாம் என்ற நிலைக்கு காலம் வந்து விட்­டது. தவ­று­களை ஒரு சில அர­சியல் தலை­வர்கள் செய்­கின்­றனர். ஆனால் தண்­டனை பொது­மக்­க­ளுக்கே கிடைக்­கின்­றது. இதை மாற்­றி­ய­மைக்க வேண்டும்.

எனவே, நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை அன்று எதிர்த்த அனை­வரும் இன்று அர­சாங்­கத்­திற்­குள்­ளேயே இருக்­கின்­றனர். அவர்கள் நினைக்க வேண்டும் மாற்­றி­ய­மைப்­பது தொடர்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதை செய்தால் பொது வேட்பாளர் தொடர்பில் பேச வேண்டிய தேவை ஏற்படாது. இப்போதும் ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, இதற்கான முடிவினை அவரே மேற்கொள்வது தான் நியாயமானது எனவும் அவர் தெரிவித்தார்.

வி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :