ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கே? என்ன நடக்­கின்­றது? ஐக்­கிய தேசியக் கட்சி கேள்வி

ண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கே வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு என்ன நடக்­கின்­றது என்று கேள்வி எழுப்­பி­யுள்ள ஐக்­கிய தேசியக் கட்சி அவற்றின் உண்­மை­யான தொகையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு பொருத்­த­மான முறை­யொன்று தேவை எனவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

அங்கு அவர் தொடாந்தும் உரை­யாற்­று­கையில், 

அண்­மைக்­கா­ல­மாக ஹெரோயின் போதைப் பொருட்கள் பெரு­ம­ளவில் கைப்­பற்­றப்­பட்டு வரு­வ­தாக சுங்கப்­பி­ரி­வி­னரும் பொலி­ஸாரும் தெரி­விக்­கின்­றனர். கைப்­பற்­றப்­படும் தொகைக்கும் நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் தொகைக்கும் வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே கைப்­பற்றும் உண்­மை­யான தொகை என்ன என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு பொருத்­த­மான முறை­யொன்று தேவை­யா­க­வுள்­ளது.

நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் போதைப் பொருட்கள் அதன் பின்னர் நீதி­மன்ற பாது­காப்பில் உள்­ளதா அல்­லது பொலிஸ் பாது­காப்பில் உள்­ளதா என்­பது தெரி­யாது. இந்­த­நி­லையில் பொலிஸ் மற்றும் சுங்­கத்­தினர் கைப்­பற்றும் போதைப் பொருட்கள் மீண்டும் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கே செல்­வ­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

கடந்த வரு­டத்தில் இலங்கையில் சுமார் 1000 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :