முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் சாட்­சி­ய­ம­ளிப்­பது தேசத்­து­ரோக செய­லாகும்

.நா. விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் சாட்­சி­ய­ம­ளிப்­பது தேசத்­து­ரோக செய­லாகும் என விசனம் தெரி­விக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொது செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, பர­ண­கம ஆணைக்­கு­ழுவில் சாட்­சியம் வழங்க சொல்ஹெய்ம் முயற்­சிப்­பது அவ்­வா­ணைக்­கு­ழு­விற்கு சர்­வ­தேச அங்­கீ­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுக்கும் சதித்­திட்­ட­மாகும் என்றும் குற்றம் சாட்­டினார்.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொது செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,

இலங்­கைக்கு எதி­ராக விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் நவ­நீதம் பிள்ளை நிய­மித்த சர்­வ­தேச விசா­ரணைக் குழுவை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அத்­தோடு அக்­கு­ழுவை நிரா­க­ரித்­த­தோடு இலங்கை பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்­கெ­தி­ராக ஏக­ம­ன­தாக பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­றுள்ள விக்­கினேஸ்ரன் எவ்­வாறு சர்­வ­தேச விசா­ரணை குழுவின் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க முடியும். அவ்­வாறு சாட்­சி­ய­ம­ளிப்­பது என்­பது தேசத்­து­ரோக செய­லாகும்.

இதற்­கெ­தி­ராக எவ்­வா­றான சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்க முடியும் என்­பது தொடர்பில் தெளி­வில்லை. ஆனால் சர்­வ­தேச விசா­ரணை குழுவில் முத­ல­மைச்சர் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு எதி­ராக அர­சாங்கம் கடும் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்.

யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம ஆணைக்­கு­ழுவை உள்­ளூரில் நிய­மித்தார். இக்­கு­ழு­விற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக அண்­மையில் ஜனா­தி­பதி மூவர் அடங்­கிய வெள்­நாட்டு நிபு­ணர்­களை நிய­மித்தார். இதன் பின்னர் இந்த ஆணைக்­கு­ழு­விற்கு சாட்­சி­யங்­களை வழங்க தயான் ஜய­தி­லக்க, விக்டர் ஐவன், விக்கி­னேஸ்­வரன் மட்­டு­மல்ல இலங்­கையை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுத்த எரிக்­சொல்­ஹெய்மும் முண்­டி­ய­டிக்­கின்­றனர்.

பர­ண­கம ஆணைக்­குழு உள்ளூர் விசா­ர­ணைக்­கு­ழுவில் இயங்கும் போது ஆர்வம் காட்­டா­த­வர்கள் இன்று வெளி­நாட்டு நிபு­ணர்­களை நிய­மித்­ததும் ஆர்வம் காட்­டு­கி­றார்கள். ஏன் விசேடமாக சொல்ஹெய்ம் சாட்சி வழங்குவதன் மூலம் பரணகம ஆணைக் குழுவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். அதற்கே இந்த முயற்சிகள் இடம் பெறுகின்றன. எனவே இக்குழுவிற்கு வெளிநாட்டு நிபுணர்களை நியமித்தமை அரசாங்கம் செய்த மாபெரும் பிழையாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :