கடந்த பத்து வருடங்களில் சைக்கிள் விபத்துக்களில் 2,691 பேர் உயிரிழப்பு


டந்த பத்து வருடங்களாக இடம்பெற்ற சைக்கிள் விபத்துக்களில் இரண்டாயிரத்து 691 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் சைக்கிள் விபத்துக்களில் 258 பேர் உயிரிழந்துள்ளதாக சபையின் தலைவர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

மின்விளக்குகள் இன்றி இரவு நேரத்தில் செலுத்தப்படுகின்ற சைக்கிள்களே பெரும்பாலும் விபத்துக்குள்ளாகின்றன. சைக்கிள்களின் முன்புறத்தில் வெள்ளை நிற மின்விளக்கும் பின்புறத்தில் சிவப்பு நிற மின்விளக்கும் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றாமல்சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுள்ளதாகவும் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.n1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :