பொதுபல சேனாவுடனான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அடுத்த வாரம் வெளிப்படும்

பொதுபல சேனாவுடனான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அடுத்த வாரம் வெளிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனாவின் செயற்பாடுகள் என்பன குறித்து கடந்த வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்திய தினம் ஜனாதிபதி தலைமையில் கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இனங்கள், மதங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுவதற்கு முற்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பனவற்றுக்கு வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் நேரடியாக நிதி கிடைக்கப் பெறுவது இதன்போது ஆராயப்பட்டுள்ளது. ஒரு தூதரகத்திலிருந்து பணம் பெற்றுக்கொள்ளும் நபரின் பெயர் இதன்போது ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டு சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :