நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...!

சுலைமான் றாபி-
மூகத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் உள்ளன. அந்தப் பொறுப்புக்களை அவரவர்கள் செவ்வனே நிறைவேற்றும் போதுதான் அல்லல்படும் மக்களின் அவலங்களைக் குறைக்க முடியும். அந்த வகையில் நிந்தவூர் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் காணப்படும் ஜேர்மன் நட்புறவு பாடசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள அரசடித் தோட்டத்தையும் , அட்டப்பள்ளத்தையும் இணைக்கும் பாலமாகும். இந்த பாலம் சுனாமிக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டாலும் தற்போது போதிய பாதுகாப்பு வசதியின்றி அது காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பயணம் செய்யும் பிரயாணிகள் மனப்பயங்களுடன் பயணிப்பதனை வெகுவாக அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் இந்த பாலத்தினூடாக பயணிக்கும் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், மோட்டார் வாகனம் மற்றும் கனரக வாகனங்களை தங்கள் உயிர்களை கேள்விக்குறியாக்கிய நிலைகளிலே இந்த பாலத்தினூடாக பயணிக்கின்றனர்.

மேலும் அதே போன்று 08அடி தாழ்வாக காணப்படும் இந்த பாலத்தின் கீழ்பகுதியூடாக வெள்ள நேரங்களில் அதிகமான நீர்கள் கடலுக்குச்செல்கின்றனது. மேலும் இந்தப்பாலத்தின் அருகில் தேசிய நீர்வழங்கல் வாடிகாலமைப்புச்சபையின் நீர்க்குழாய்களும் செல்கின்றன. எனவே, இவை அனைத்திற்கும் தேவையான (Hand Rails மற்றும் Up Rights ) போன்றவைகள் இல்லாமல் உயிர்களுக்கும், வாகனங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. மேலும் இந்த வீதியினூடாகவும், பாலத்தினூடாகவும் இரவுவேளைகளில் பயணிப்பதற்கு மின்சார வசதியின்றும் இதன் அவல நிலை காணப்படுகிறது.


எனவே இந்த வீதியினூடாக இரவிலும், பகலிலும் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள், தொழிலாளிகள், பிரயாணிகள் இன்னும் பாதசாரிகளின் நன்மை கருதி இந்த பாலதிற்கு தேவையான பாதுகாப்பு வேலிகளை அமைத்துக் கொடுப்பதும் இந்த பாலத்தின் பிரதேச எல்லைக்குதேவையான மின்சார வசதியினையும் பெற்றுக்கொடுப்பது பிரதேச சபையின் கடமையல்லவா ?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :