கண்ணில் வெள்ளை படரல் நோய் உள்ளவர்களுக்கான இலவச பரிசோதனை சிகிச்சை முகாம்

எம்.வை.அமீர்,ஏ.எம்.சம்சுதீன்-

ம்மியத்துஸ் ஸபாப் சமூகசேவை நிறுவனமும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் (தவ்ஹீத்) ஜும்ஆப் பள்ளிவாசலும் இணைந்து இன்று 2014-03-18 சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் கண்ணில் வெள்ளை படரல் (Cataract)நோய் உள்ளவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த கண்ணில் வெள்ளை படரல் (Cataract)நோய் உள்ளவர்கள் அந்த நோயில் இருந்து விடுபட சிகிச்சைக்காக பெரும்தொகையான பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளதால் வசதிகுறைந்தோர் இவ்வாறான சிகிச்சையை செய்யாது அவதியுறுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு ஜம்மியத்துஸ் ஸபாப் சமூகசேவை நிறுவனத்தினர் ஒவ்வொரு பிரதேசமாக சென்று இவ்வாறான நோய்களைக் கண்டுபிடித்து குறைபாடுள்ளவர்களுக்கு இலவசமாக டுநளெ பொருத்தி உரிய சிகிட்சை வழங்கி வருகின்றனர்.

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் (தவ்ஹீத்) ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தானில் இருந்து வருகைதந்த வைத்திய குழுவினர் பெரும்திரளாக வருகை தந்திருந்த நோயாளிகளை பரிசோதித்து அவர்களில் குறித்த நோய் உள்ளவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான சிகிற்சையை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :