பொதுபல சேனா மற்றும் ரவானா போன்ற சக்திகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் - அமைச்சர் ஹக்கீம்



பொ
துபல சேனா மற்றும் ரவானா பலய போன்ற கடும்போக்குடைய சக்திகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறித்த கடும்போக்குடைய அமைப்புக்கள் வரம்பு மீறிச் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கடும்போக்குடைய அமைப்புக்களை பாதுகாப்பதற்கு எந்த தரப்பினரும் முயற்சி எடுக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாட்டுத் தளங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஓர் ஜனநாயகக் கட்சி எனவும், மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில அரசாங்க ஆதரவு தரப்பினர் கடும்போக்குடைய சக்திகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும், இந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாட்டின் சகல தரப்பினரையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச சமூகத்தினதோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களினதோ கைப்பொம்மையாக செயற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நாட்டின் சகல இன, மத மக்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :