மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவான நிஸார் நியமனம்.




பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளருமான இல்மி அஹமத் லெவ்வையின் வேண்டுகோளுக்கிணங்க நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவானாக காத்தான்குடி தாருள் அதர் அமைப்பின் செயலாளரும் ,காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையின் பட்டதாரி ஆசிரியருமான எம். எஸ். எம் நிஸார் நியமிக்கப்பட்டுள்ளார்

மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவான நியமிக்கப்பட்ட எம். எஸ். எம் நிஸாருக்கு நியமன பத்திரத்தினை இல்மி அஹமட் லெவ்வை தாருள் அதர் அமைப்பின் காரியாலயத்தில் வைத்து அண்மையில் கையளித்தார்.

இதில் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பிரதித்தலைவர் அப்துல் நஸார், உப செயலாளர் முஸம்மில் மற்றும் தாருள் அதர் அமைப்பின் தலைவர் ரவுப்,ஸாஜில் நியூஸ் ஊடக வலயமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பஸால் உட்பட அதன் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :