சிங்கள ராவய பொதுச் செயலாளரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை


சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

சட்டக் கல்லூரியின் மாணவர் ஒருவர் கூரை மீது ஏறி எதிர்ப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தேரருக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு அமைய பஞ்ஞாலோக்க தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்தே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :