வாழைச்சேனை கிண்ணையடி கிராமத்திற்குள் இரவு புகுந்த காட்டு யானையால் அட்டகாசம் - படங்கள்



த.நவோஜ்-


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்திற்குள் புதன்கிழமையன்று இரவு புகுந்த காட்டு யானை ஒன்று கிராமத்தின் பல பகுதிகளிலும் அட்டகாசம் புரிந்துள்ளதாக கிராம வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த தினமன்று கிண்ணையடிக்கு குறுக்கே செல்லும் ஆற்றின் ஊடாக மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த யானையானது குடியிருப்பு காணியில் இருந்த தென்னை மரம், வேலிகள், அரிசி ஆலை போன்றவற்றையும் சேதப்படுத்தியதுடன், அரிசி ஆலையின் வைக்கப்பட்ட தவீட்டு மூடையையும் உணவாக உட்கொண்டு விட்;டு சென்றுள்ளது.

இராணுவத்தினரின் உதவியுடனேயே அதனை தாம் துரத்தியதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இவ் யானையானது அருகிலுள்ள முருக்கன் தீவு, பிரம்படித் தீவு, போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்தே ஊருக்குள் வருவதாகவும், இதனால் அச்சமடைந்து காணப்படுவதாகவும், உரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :