தில்லங்குழி ஆறு சிரமதானத்தின் மூலம் துப்பரவு : சல்பீனியா தாவரமும் அகற்றப்பட்டது - படங்கள்




த.நவோஜ்-

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுக்காமுனை தில்லங்குழி ஆறு சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டு ஆற்றை மூடிக்கிடந்த சல்பீனியா தாவரங்களும் மற்றும் நீர் மூடித் தாவங்களும் ஏனைய கழிவுகளும் அகற்றப்பட்டன.

ஈச்சிலம்பற்று, கறுக்காமுனை, இலங்கைத்துறை, சின்னக்குளம், உடப்புக்கேணி ஆகிய கிராமத்தவர்கள் இந்த ஆற்றைத் தமது குளிப்பு மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்திருந்தனர்.

ஆயினும் இந்த ஆறு நீண்டகாலமாக சல்பீனியாத் தாவரங்களாலும் இதர கழிவுகளினாலும் மூடப்பட்டுக் கிடந்தது.

இதனை கிராமத்தவர்கள், சமுர்த்தி பயனாளிகள், சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்;, கிராம உத்தியோகத்தர் என எல்லோருமாக இணைந்து சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்துள்ளனர்.

கறுக்காமுனை தில்லங்குழி ஆறு சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்ட பின்னர் தற்சமயம் மீண்டும் மக்கள் இந்த ஆற்றை நீராடுவதற்கும் மற்றும் இன்னபிற தேவைகளுக்குமாக நீரைப் பெற்றுக் கொள்வதற்கும், மீன் பிடிப்பதற்கும் ஆரம்பித்துள்ளனர் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவகலா சோமசுந்தரம் தெரிவித்தார்.

சுமார் 500 மீற்றர் நீளமான ஆற்றின் பகுதி பொதுமக்களால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :