மஹிந்த ஜனாதிபதியாகாவிட்டால் முஸ்லிம் தலைவர்களின் நிலை தான் என்ன ....? - அமைச்சர் டலஸ்


நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு சில முயற்சித்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 30 ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்ற இலங்கையில் தற்பொது சமாதானத்தின் நன்மைகள் கிடைக்கப் பெற்று வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

சில சக்திகள் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் எனினு. அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலதா மாளிகை மீதான தாக்குதல், அரந்தலாவை தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் போன்ற பல தாக்குதுல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகவும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005 ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றியீட்டியிருக்காவிட்டால் முஸ்லிம் தலைவர்களின் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளோபல்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :