UNP உறுப்பினர் சஞ்ஜீவ கவிரத்னவின் இடத்திற்கு இப்றாஹிம்



த்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சஞ்ஜீவ கவிரத்ன மாரடைப்பால் மரணமடைந்தார்.

மத்திய மாகாண சபையில் இருந்த மிகவும் துடிப்பு மிக்க ஒரு உறுப்பினர். இளம் வயதுக்காரர். அத்துடன் சஜீத் பிரேமதாசவின் தீவிர ஆதரவாளர். இவர் மரணத்தால் இடைவெளியாகின்ற இடத்திற்கு வர இருப்பவர் உக்குவலையைச் சேர்ந்த இப்ராஹிம். இந்த இப்ராஹிம் ஒருவகையில் அதிஸ்டக்காரர் என்றுதான் கூற வேண்டும்.

மாகாண சபைக்குப் போட்டியிடுகின்ற இவர் வழக்கம் போல் வெற்றி பெறா விட்டாலும் தோற்றுப் போன வேட்பாளர்களின் மிகவும் முன்னணியில் எப்போதும் இருப்பார். எனவே எப்படியும் மிகக்குறுகிய காலத்திற்குள் இவர் மத்திய மகாண சபைக்குள் நுழைந்து கொள்ள சந்தர்ப்பத்தைப் பெற்றக் கொள்ளவார். அந்தவகையில் இந்த முறையும் கவிரத்னாவின் மரணத்தால் ஏற்படுகின்ற இடை வெளிக்கு இவர் மாத்தளை மாவட்டம் சார்பில் மத்திய மாகாண சபைக்குள் விரைவில் வர இருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :