இலங்கைக்கு எதிராக ஐ. நா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான விவாதம் இன்று

லங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான விவாதம் இன்று (26) இடம்பெற்றது. 

அமெரிக்கா, பிரித்தானியா, வட அயர்லாந்து, மொன்டன்கரோ, மெசிடோனியா மற்றும் மொரிஷீயஸ் ஆகிய நாடுகளினால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தீர்மானம் மீதான விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடுகள் இணைந்து கொள்ளவுள்ளன. 

இலங்கை சார்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோர் ஜெனீவாவில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :