மட்டக்களப்பில் ஏழு எருமை மாடுகளுடன் கைது செய்யப்பட்ட நபர்கள்



த.நவோஜ்-ட்டக்களப்பு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ஏழு எருமை மாடுகளுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரும் ஜம்பது ஆயிரம் ரூபாய் காசுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமான முறையில் அறுவைக்காக எருமை மாடுகளை மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் செவ்வாய்கிழமையன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது வழக்கினை கேட்டறிந்து கொண்ட நீதிபதி இவர்களை தலா ஜம்பதினாயிரம் ரூபாய் காசுப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட மாடுகளை அறுவைக்கு பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டது.

இந்த வழக்கினை நீதிமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :