28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி புகையிரதம் பளைக்கு சென்றது -படங்கள் இணைப்பு






பழுலுல்லாஹ் பர்ஹான்-

புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் நேற்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகண திஸநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், யாழ்.இந்திய துணை தூதுவர் மகாலிங்கம் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.

நேற்று முதல் கொழும்பு பளை வரையான சேவைகள் நடைபெறுவதோடு வரும் வெள்ளிக்கிழமை முதல்; குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவையானது எதிர்வரும் தினமும் கொழும்;பிலிருந்து பளை வரை தனது சேவையினை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை யாழ்.தேவி புகையிரதம் எதிர்வரும்; யூன் மாதமே யாழ்ப்பாணத்திற்கு செல்லும் எனவும் அதன் பின்னர் செப்ரெம்பர் 14 திகதிக்கு முன்னர் காங்கேசன்துறை அவரை செல்லும் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம அவர்கள் தெரிவித்துள்ளார்

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரது வேண்டுகோளுக்கமைவாக புகையிரத பாதைகளை குறுக்கறுத்துச் செல்லும் பாதைகளுக்கு பாதுகாப்பு கடவை அல்லது பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாகவே நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :