அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 22வது ஆண்டு ஸ்தாபன தினக் கொண்டாட்டம் - படங்கள்







த.நவோஜ்-

ட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 22வது ஆண்டு ஸ்தாபன தினக் கொண்டாட்டம் பாடசாலை பிரதான மண்டபத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எஸ்.ஸ்ரீநேசன், திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரன், கோட்டக் கல்வி அதிகாரி சு.முருகேசுப்பிள்ளை, முகாமைத்து பிரதிக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபர்கள், மூத்த பிரஜைகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது. இங்கு பாடசாலை மாணவர்களினால் வரவேற்பு நடனம், ஆங்கில குழுப்பாடல், கிராமிய நடனம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
இங்கு பாடசாலையினரால் பாடசாலை ஆரம்பிக்க வழிகோரி இடத்தை அன்பளிப்புச் செய்த பரமானந்தம் தம்பதிகளின் புதல்வர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், கிராமத்தின் மூத்த பிரஜைகள் அனைவரும் அதிதிகளால் மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :