கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் றஹ்மான் எடுத்த முயற்சியால் பெண்கள் மதரசாக்கு புதிய கட்டடம்.



பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் எடுத்த துரித முயற்சியின் பயனாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவுக்கான நிருவாகக் கட்டடத்தின் முதல் கட்ட வேலைகள் பூர்த்தியடைந்துள்ளது.

பிரதி அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர விடம் கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதல் கட்ட வேலைக்காக இருபது இலட்சம் ரூபாவை அவர் ஒதுக்கியிருந்தார். 

முதல் கட்டமாக பூர்த்தியடைந்த கட்டத்தை உறுப்பினர் இஸட்.ஏ.எச் றஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அண்மையில் திறந்து
வைத்தார். ஆதிபர் எம்.எம்.ஹிர்பஹான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மாந்தறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எம்.ஏ.ஜமால் முகம்மது உள்ளீட்ட உறுப்பினர்கள் பலரும் ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :