பூங்காவுக்கு காரில் வந்த காதல் தம்பதியரை காரோடு அடித்து நொறுக்கிய யானை

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆசிரியையான 30 வயது சாரா ப்ரூக்சுக்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் டி கிளார்க்குடன் திருமணம் நிச்சயமானது.

திருமணம் நிச்சயமானவுடன் தனது வருங்கால கணவருடன் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை காரில் சுற்றிப்பார்த்தபோது, மதம் பிடித்த யானை ஒன்று அவர்கள் காரை தலைகீழாக புரட்டி அடித்தது. மேலும் தனது தந்தங்களால் சாராவின் தொடைப்பகுதியில் குத்தி கிழித்தது.

இது குறித்து பேசிய அப்பூங்காவின் பொது மேலாளர் வில்லியம் மபாசா, ஆண் யானையான அதற்கு மதம் பிடித்தவுடன் அதன் சுய பலத்தை போல் 60 மடங்கு அசுர பலம் ஏற்பட்டதால் சாராவின் காரை அடித்து துவம்சம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சாராவிற்கு பொம்பேலாவிலுள்ள மெடி-கிளினிக் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன் பின் அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது காயங்கள் ஆற இன்னும் 3 வார காலம் ஆகுமென்றும், அதுவரை இருவரும் அந்நாட்டிலேயே தங்க நேரிட்டுள்ளது என்றும் தெரிகிறது.

சாராவை தாக்கிய யானை ஏற்கனவே பலமுறை மதம் பிடித்ததால், பல காளைகளை அடித்து கொன்றுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கு பின் அது கொன்றழிக்கப்பட்டு விட்டதாகவும் மபாசா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :