சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா - படங்கள்

எம்.வை.அமீர்-

நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெறும் இன்றைய வேளையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்கான நிகழ்வு சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் (2014-01-16) இடம்பெற்றது.

சம்மாந்துறை கல்வி வலயமும் சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயமும் இணைந்துமுஸ்லீம் மகளிர் வித்தியாலய அதிபர் ரீ.எம்.தௌபீக் தலைமையில்இடம்பெற்ற  இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.உமர் மௌலானா மற்றும் பிரதேசசபை உறுப்பினரும் சமாதான கல்வி பிரிவின் இணைப்பாளருமான ஏ.ஏ.முகம்மட்இ பாடசாலை திட்ட அமைப்பாளர் திருமதி கே.கே.அஹ்மட் பிரதி அதிபர் தாகா நளீம் போன்றோரும் பெரும் திரளான பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை முஸ்லீம் மகளிர் வித்தியாலயத்துக்கு என இவ்வருடத்துக்கு 220 மாணவர்கள் தரம் ஒன்றுக்கு இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக இப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வின் போது இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவச்சிறார்களினது  கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :