பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை

மிழக அரசு மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அமைச்சர்களின் நெருக்கடியால் இலங்கையில் நடைபெறும் மகாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அருகி வருவதாக இந்திய ஊடகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிட்டுள்ளன.

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பொதுநலவாய மாநாடு நடைபெற உள்ளது. தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

கொழும்பு மாநாட்டில் கலந்து கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்திருந்தார்.

அத்துடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஏ.கே. அந்தோணி ஆகியோரும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கருணாநிதியை ப.சிதம்பரம் நேரில் சந்தித்தும் பேசியிருந்தார். 

லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி சேர வாய்ப்பு அதிகம் இருக்கும் தி.மு.க.வின் கடும் எதிர்ப்பை புறக்கணிக்க முடியாத நிலையில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதனால் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

இதனை உணர்த்தும் விதமாகவே அண்மையில் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தின் உணர்வுகள் மதிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் இலங்கை மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வது அவசியம் என்பதால் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அல்லது துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி இம்மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை ஓரளவு சமாளிக்க முடியும் என்பது காங்கிரஸ் கட்சியின் கணக்கு என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :