ஐ.தே. கட்சியினை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது: ரணில்

ண்மையான ஐ.தே. கட்சியினை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது: ரணில்-
அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து சிலர் விலகியிருக்கலாம். ஆனால் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினை எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.

அரசாங்கத்தின் குறைகளை மறைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினை குழப்ப நினைப்பது முட்டாள்தனமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் எவருக்கும் அஞ்சாது கட்சிக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வின் போதே ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :