கல்முனை நகர மண்டபத்திற்கு முன்னால் உள்ள வீதி மக்கள் பயண்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ளது

-அப்துல் றஹ்மான்-
ல்முனைக்குடி பிரதான வீதியில் நகர மண்டபத்திற்கு முன்னால் உள்ள வீதி மக்கள் பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நகர மண்டபத்திற்கு முன்னால் ஸம்ஸம் அரிசி ஆலைக்கு அருகில் செல்லும் (மரைக்காயர் குளத்தடி) விதியே இவ்வாறு மிக மோசமாகவுள்ளதோடு மரங்கள் வளர்ந்து இவ்வீதி காடாகக் காட்சியளிக்கின்றது. 

அத்துடன் ஒரு சிலர் இரவு வேளைகளில் இவ்வீதியை சமுக விரோத செயல்களுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவைகளைத்தடுக்கும் பொருட்டும் இவ்வீதியை மக்கள் பயன்படுத்தும் பொருட்டும் உடனடியாக இவ்வீதியை துப்பரவு செய்து தருமாறு மக்கள் கல்முனை மாநகர சபை முதல்வரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :