-எம்.வை.அமீர்-
நாட்டில் சுகாதார அமைச்சினால் 07ம் திகதி முதல் 13ம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில், சம்மாந்துறை சுகாதார வைதிதிய அதிகாரி பணிமனையின் அனுசரணையுடன் பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட உதவி பதிவாளர் பீ.எம்.முபீன் தலைமையில் ஒன்று கூடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைதிதிய அதிகாரி பணிமனையின் சார்பில் சம்மாந்துறை பொதுச்சுகாதார உத்தியோகத்தர் எம்.ராஜ் குமார் டெங்கு நுளம்பு பரவும் விதம் குறித்தும் அதன் தாக்கங்கள் சம்மந்தமாகவும் அதனைக்கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நீண்ட கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொண்டார்.
சிரேஷ்ட உதவி பதிவாளர் பீ.எம்.முபீன் தனது உரையில் வளாகத்தின் சுகாதாரத்தை மேன்படுத்துவது சம்மந்தமாகவும் குழுக்களாக பிரிந்து வளாகத்தின் சுகாதார நிலையை கண்காணிப்பது சம்மந்தமாகவும் கருத்துக்களை வெளியிட்டார்.
0 comments :
Post a Comment