நடாவின் மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்
தமிழ் ஊடகவியலாளர்களான எஸ்.நடராஜா மற்றும் ரவிவர்மா ஆகியோரின் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளது.
அது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா மறைவு தமிழ் ஊடக துறைக்கு ஓர் பாரிய இழப்பாகும்.
'நடா' என அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா, வீரகேசரி பத்திரிகையில் நான்கு தசாப்தகங்களாக பணியாற்றி பல தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார்.
அத்துடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமைக்காகவும் இவர் அரும்பாடுபட்டுள்ளதுடன் முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடனும் நெருங்கி செயற்பட்டுள்ளார்.
இவரின் சேவையினை பாராட்டி கடந்த 2012ஆம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் எஸ்.நடராஜா கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக செயற்பட்ட ரவிவர்மாவும் மறைவும் தமிழ் ஊடக துறைக்கு பாரிய இழப்பாகும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment