வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி தலைமையில் கூட்டம்

மிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இந்­தியா அல்­லது வெளி­நா­டு­க­ளி­லேயே பெரும்­பான்­மை­யான காலத்தை கடத்­து­கின்­றனர். வெளி­நா­டு­களில் இல்லை என்றால் கொழும்பில் இருப்­பார்கள். 

மாதத்­துக்கு ஒரு தடவை வடக்­குக்கு சென்­று­விட்டே கூட்­ட­மைப்­பினர் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வித்தார்.

வடக்கு மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் உள்­ளன. அவற்றை வெளிக்­கொண்­டு­வர அந்த மக்கள் வழி­யில்­லாமல் உள்­ளனர். எனவே ஆளும் கூட்­ட­ணியின் வேட்­பா­ளர்கள் மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­வ­தி­லேயே அதிக ஆர்வம் செலுத்­து­கின்­றனர் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்குத் தேர்தல் நிலை­மைகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வட மாகாண சபைத் தேர்­த­லுக்கு பொறுப்­பாக அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்­தவே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் வடக்குத் தேர்தல் விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில் வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தேர்தல் அலு­வ­ல­கங்­களை ஆளும் கூட்­டணி ஆரம்­பித்­து­விட்­டது. தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்­கான பிர­தி­நி­தி­களை நிய­மிக்கும் செயற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

தற்­போது சிறி­ய­ள­வி­லான பிர­சாரக் கூட்­டங்­களை நடத்­தி­வ­ரு­கின்றோம். இம்­மாதம் 25 ஆம் திக­தி­யுடன் அந்த செயற்­பாடு முடி­வ­டைந்­ததும் வீடு வீடாக சென்று பிர­சாரப் பணி­களை முன்­னெ­டுப்போம். அனைத்து வீடு­க­ளுக்கும் செல்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம்.

அதன் பின்­னரே வடக்கில் பிர­தான பிர­சாரக் கூட்­டங்­களை நடத்தத் திட்­ட­மிட்­டுள்ளோம். வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பிர­தான பிர­சாரக் கூட்­டங்­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

என்­னதான் அர­சாங்கம் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டாலும் வடக்கு மக்கள் கூட்­ட­மைப்­புக்கே வாக்­க­ளிக்கும் போக்கு காணப்­ப­டு­வ­தாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவ்­வாறு நிலைமை இல்லை. மக்­க­ளுக்கு நாங்கள் விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தி­வ­ரு­கின்றோம்.

கூட்­ட­மைப்­பினர் இந்­தியா அல்­லது வெளி­நா­டு­க­ளி­லேயே பெரும்­பான்­மை­யான காலத்தை கடத்­து­கின்­றனர். வெளி­நா­டு­களில் இல்லை என்றால் கொழும்பில் இருப்­பார்கள். மாதத்­துக்கு ஒரு தடவை வடக்­குக்கு சென்­று­விட்டே கூட்­ட­மைப்­பினர் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றனர். இது மக்­க­ளுக்கு நன்­றாக தெரியும்.

அர­சாங்கம் வடக்கில் விரை­வான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. எனினும் வடக்கில் மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் உள்­ளன. ஆனால் மக்­களின் பிரச்­சி­னை­களை வெளிக்­கொ­ணர முடி­யாத நிலையில் மக்கள் உள்­ளனர். குறிப்­பாக விதவைப் பெண்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

எனவே ஆளும் கூட்­ட­ணியின் வேட்­பா­ளர்கள் மக்­களின் பிரச்­சி­னை­களை கண்­ட­றி­வதில் அதிக ஆர்வம் செலுத்­து­கின்­றனர். அந்த வகையில் வடக்கில் யார் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளனர் என்­பது மக்­க­ளுக்கு நன்­றாக தெரிந்த விட­ய­மாகும். எனவே மக்­களின் ஆத­ரவு எமக்கு உள்ளது என்றார்.(vk)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :