கம்பஹாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

வெலிவேரிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் - பொலிஸார், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

வெலிவேரிய பகுதியிலுள்ள தொழிற்சாலைகளினால் இப் பிரதேசங்களில் உள்ள குடிநீர் கிணறுகளில் இரசாயனம் கலக்கப்படுவதாகவும் உடனடியாக இப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை மூடக்கோரியும் பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு நடத்தியதாகவும் பதிலுக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்புகை வீசியுள்ளதோடு தண்ணீர் பீச்சியடித்துள்ளனர். 

இருதரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகரிக்க பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பலர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :