நான் காவி உடையை கழற்றிவிட தயார் டிலான் பதவி துறக்க தயாரா- பொதுபல சேனா

மைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ள விதமாக பொதுபல சேனா அமைப்பு ஒரு முஸ்லிம் நபருக்கு, முஸ்லிம் வர்த்தக நிலையொன்றுக்கு அல்லது முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாக நிரூபித்தால் தாம் மகியங்கனையிலுள்ள விகாரைக்குச் சென்று தனது காவி உடையை கழற்றிவிடுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிரூபிக்காவிடின், அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் இருந்து விலக வேண்டுமெனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளாரர். 'இவ்வாறு பொய்கூறும் உறுப்பினர்களுக்கு இனிமேலும் வாக்களிக்க வேண்டாம்" என அவர் தெரிவித்துள்ளார்.

மகியங்கனையில் 02-08-2013 பிற்பகல் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :