நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
நாட்டுக்காக கடமையாற்றி அதற்காக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.
நாட்டின் எதிர்காலத்திற்கு எது தேவை என்பதனை உணர்ந்து அதற்கமைய மஹிந்த சிந்தனைக் கொள்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வாரியப்பொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment