-எம்.பைஷல் இஸ்மாயில்-இம்போட்மிரர் இணையத்தளம் நடத்தும் ரமழான் கேள்வி பதில் நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும், இப்தார் நிகழ்வும் இன்று (29) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் அணுசரணை வழங்கிய நளீம் ரேடர்ஸ் உரிமையாளர் ஏ.எல்.நளீம் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இம்போட்மிரர் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.
இதில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஏறாவூர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் பரிசில்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment