மும்முனை கிரிக்கெட் தொடரில் உலக சாம்பியனை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

மும்முனை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினால் மயிரிழையில் வெற்றிபெற்றுள்ளது.

கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணிசார்பாக ரோஹித் ஷர்மா 60 ஓட்டங்களையும், சுரேஷ் ரெய்னா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக கெமர் ரூச், ரினோ பெஸ்ட், டெரன் சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

230 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கை எட்டியது.

மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோன்சன் சார்ள்ஸ் 97 ஓட்டங்களையும், டெரன் பிராவே 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய அணிசார்பாக உமேஸ் யாதேவ் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், இஷாந் ஷர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் வீழ்த்தினார்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக மேற்கிந்திய தீவுகள் அணிவீரர் ஜோன்சன் சார்ள்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தொடரில் தாம் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :