ரமழான் மாதத்தில் அதான் ஒலி பரப்பினை சரியான நேரத்திலே மேற்கொள்ள வேண்டும்

மழான் மாதத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் அதான் ஒலி பரப்பினை சரியான நேரத்திலே மேற்கொள்ள வேண்டும். இலத்திரனியல் ஊடகங்களுக்கிடையிலான போட்டியினால் சிறிது நேரமெனினும் முன்னதாகவோ பின்னதாகவோ ஒலிபரப்பக் கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இலத்திரனியல் ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் விடயத்திலும் நோன்பினைத் திறக்கும் விடயத்திலும் அதான் ஒலிபரப்பப்படும் நேரத்தையே கணிப்பிடுகிறார்கள். எனவே ஊடகங்கள் சரியான நேரத்தில் அதானை ஒலிபரப்ப வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வேண்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :